
பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, 184 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற‌னர்.
பெங்களூருவில் உள்ள மாகடி சாலையில் கன்னையா லால் (46) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் கடையை மூட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்த 3 பேர் கடைக்குள் புகுந்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 184 கிராம் தங்க‌ நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.