
தூத்துக்குடி: தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளதாகவும், இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையைவிட 3 மடங்கு அதிகமாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்தும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வடக்கு முனையம்-3 உட்பட, தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் மோடி பேசியதாவது: