
தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உளளார். நேற்று முன்தினம் திருப்போரூரில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கியவர் நேற்று இரண்டாவது நாள் நடை பயணத்தை செங்கல்பட்டில் தொடங்கினார்.
அப்போது, அன்புமணி பேசியதாவது: இங்கு நான் வாக்கு கேட்க வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு மீண்டும் யார் வேண்டாம் என்பதை சொல்வதற்காக வந்துள்ளேன். திமுக ஆட்சி தமிழ்நாட்டிற்கு போதும். தமிழகத்தில் வியாபாரிகள் இன்று வியாபாரமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.