
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.63 லட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்ட டயாலிசிஸ் மையத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.