
“உருட்டுகள், திருட்டுகள் எல்லாம் அதிமுகவுக்கே சொந்தமானவை” என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கங்கைகொண்ட சோழபுரத்தில் மக்களுக்கு ஏதாவது ‘ஷோ’ காட்ட முடியுமா என்ற எண்ணத்தில்தான் பிரதமர் மோடி வந்துள்ளார். பாஜக தலைவர்கள் எத்தனை முறை வந்தாலும், எத்தனை எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. வரும் தேர்தலில் அவர்களது நிலை இன்னும் மோசமாகத்தான் போகும்.