
சென்னை: மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய நெடும் பயணம் மேற்கொள்ள மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திட்டமிட்டுள்ளார்.
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அண்மையில் வைகோ குற்றம்சாட்டி இருந்தார்.