
சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.