
விழுப்புரம்: நடைபயணத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இசைவுடன், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் ‘அதிகார மோதலால்’ பாமக இரண்டாக உடையும் நிலை உருவாகி உள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் கடந்த 20-ம் தேதி அன்புமணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபிக்கு கடிதம் எழுதினார்.