
ஜலவாட்: ராஜஸ்தானின் ஜலவாட் மாவட்டம், பிப்லோட் என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று காலை 8.30 மணியளவில் வகுப்பறைகளுக்கு வந்த மாணவர்கள், இறைவணக்க நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தனர். அப்போது பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சுமார் 40 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பதறிப்போன ஆசிரியர்களும் கிராம மக்களும் மீட்புப் பணியில் இறங்கினர். பின்னர் அதிகாரிகளும், பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர்.