
சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு தில்லுமுல்லு நடவடிக்கை என்றும் மக்களாட்சி மக்களுக்கே உரியது; அதையாரும் களவாட அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஆதாரை ஆவணமாக கருதவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையில் பிஹாரில் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.