
சென்னை: வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்பு, பெருமைக்கு அடிப்படை என்று ராணுவ அதிகாரிகளுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளின்போது மேற்கொள்ளும் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய ராணுவ தென் பிராந்திய பகுதியின் அசாதாரண பங்களிப்பை பாராட்டி, நன்றி தெரிவிக்கும் விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில், ராணுவத்தின் 16 மெட்ராஸ் (திருவாங்கூர்), 35 ஃபீல்ட் படைப்பிரிவு, ஆவடி ஆயுத தொழிற்சாலை, 65 கம்பெனி ராணுவ சேவை படை (விநியோகம்) ஆகிய 4 பிரிவுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.