
சென்னை: போலி வணிகர்களைத் தடுக்க கள ஆய்வு செய்வது அவசியம் என்று வணிகவரித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார். சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்ட அரங்கில், நடப்பாண்டு ஜூன் மாதம் வரையிலான அனைத்து வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: புதிதாக ஜிஎஸ்டி வரியில் இணைய விண்ணப்பிக்கும் வணிகர்களின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதுடன், அவர்கள் உண்மையாக தொழில் புரிகிறார்களா என்பதையும் கள ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் போலி வணிகர்களைத் தடுக்க முடியும்.