
புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய 4 பேரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் தமிழில் பதவியேற்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுக-வின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவையில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.