• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *