• July 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்​பாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​களை​யும் திருப்பி ஒப்​படைக்க அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யிட​மிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறு​வனங்களுக்கு திருப்பி விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக்​கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்.ரவிச்​சந்​திரன் மற்றும் அவர் இயக்​குந​ராக உள்ள நிறு​வனத்​துக்கு எதி​ராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்​தது. இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் வழக்​குப்​ப​திவு செய்து ரவிச்​சந்​திரன் மற்​றும் அவருக்கு சொந்​த​மான நிறு​வனங்களில் சோதனை மேற்​கொண்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *