• July 25, 2025
  • NewsEditor
  • 0

2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2020 நவம்​பர் 6-ல் திருப்​பூர் வந்த அப்​போதைய முதல்​வர் எடப்​பாடி பழனி​சாமி, “காங்​க​யம் காளைக்கு காங்​க​யம் நகரின் மையப்​பகு​தி​யில் சிலை அமைக்​கப்​படும்” என அறி​வித்​தார். அது அறி​விப்​போடு நின்று போன நிலை​யில், தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வந்த ஸ்டா​லினும் அதே உத்தரவாதத்தை அளித்​துச் சென்​றார். ஆனால், ஆண்​டு​கள் 4 ஆன நிலை​யிலும் இன்​னும் காளைக்கு சிலை வந்​த​பாடில்​லை. காளைக்கு சிலை வைத்து பெயரெடுப்​பது யார் என்​ப​தில் திமுக-வுக்​குள்​ளேயே இரண்டு கோஷ்டிகள் தெற்கு வடக்​காக இழுப்​பது தான் பிரச்​சினைக்கு காரணம் என்கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *