
சென்னை: “தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும் அப்துல்லா ஆகியோர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அதேநேரம், புதிய எம்.பி.க்களாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் பி.வில்சன் ஆகியோர் பதவியேற்றுள்ளன.