
சென்னை: “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை” என்று விமர்சித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், “நெருப்புடன் விளையாடாதீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து 'QUIT SIR' என்ற புகைப்படத்துடன் அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை.