
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறிய 2 தங்கும் விடுதிகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், 200 விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து, கொடைக்கானலில் ‘ஹோம் ஸ்டே’ என்ற பெயரில் வீடுகளை தங்கும் விடுதியாக சிலர் மாற்றியுள்ளதாக புகார் எழுந்தது.