
நெம்மேலி: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் கடல் அரிப்பு தொடரும் நிலையில், சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியாகியும் பணிகள் தொடங்கப்படாததால் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக் கோரி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதி அருகே, கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெம்மேலி மீனவர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் குடியிருப்புகளை கடல் நீர் உட்புகும் நிலை உள்ளது.