• July 25, 2025
  • NewsEditor
  • 0

ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக கண்காணிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

2026 சட்​டமன்​றத் தேர்​தலை மனதில் வைத்து தமி​ழ​கத்​தின் அனைத்து முக்​கிய கட்​சிகளுமே கூட்​ட​ணி​களை கட்​டமைப்​பது, கட்​சி​யினரை தேர்​தலுக்கு தயார்​படுத்​து​வது என மும்​முரம் காட்டி வரு​கின்​றன. இதில், ஆளும் கட்​சி​யான திமுக-​வும் ஆண்ட கட்​சி​யான அதி​முக-​வும் மற்​றவர்​களை விட ஒருபடி மேலாகவே தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *