
ராமநாதபுரம்: “மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்” என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 21 ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியோ இந்த தருணத்தில் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.