
சென்னை: தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-23-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர்கள் அணி துணைச் செயலாளர் இ.சரவணன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.