
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் கடற்கரை, கோயில் தெப்பக்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தநாளாக அமாவாசை கருதப்படுகிறது. அதிலும், ஆடி, புரட்டாசி (மகாளயம்), தை மாதங்களில் வரும் அமாவாசை நாள், கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோருக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் செய்வது, அவர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.