
சென்னை: வழக்கு தொடரும் கட்சிக்காரர்கள் தங்கள் மனைவியை விட தங்களது வழக்கறிஞர்களைத்தான் அதிகம் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை ஒருபோதும் வீணாக்கிவிடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் பணி ஓய்வு பெற்றதால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசுகையில், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடந்த 9 ஆண்டுகளில் 37 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்டிப் பேசினார்.