
சென்னை: திமுகவுக்கு எதிராக, ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தொடங்கிவைத்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருந்தார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு புதுக்கோட்டை வந்த அவர், அங்கு ஆலங்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.