
மண்டி: இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டம், சர்காகாட் என்ற இடத்தில் இருந்து துர்காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 29 பேர் இருந்தனர்.
இந்நிலையில் சர்காகாட் அருகில் இப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர்.