
பஸ்தர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நக்சல் வேட்டையை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் நேற்று 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் 49 பேர் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நக்சல் வேட்டைக்கு என மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில போலீஸில் சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டன. இவர்களுடன் துணை ராணுவப்படையினரும், விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.