
சென்னை: மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 12 பெட்டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பயணிகள் சென்று திரும்ப வசதியாக, மெமு (மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்த ரயில்கள் சென்னை ரயில்வே கோட்டத்தில் காட்பாடி – அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், திருத்தணி – சென்னை சென்ட்ரல், சென்னை – திருப்பதி, நெல்லூர் உட்பட 15-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் 8 அல்லது 9 பெட்டிகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இடவசதி குறைவாக இருக்கும்.