
புதுடெல்லி: கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததற்கான 100% ஆதாரம் உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தோம். அங்கு ஆயிரக் கணக்கில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.