• July 25, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர் ஆவர். அவர் தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு மற்​றும் வங்கி சேமிப்பை ஏழு​மலை​யானுக்கு வழங்க வேண்​டும் என உயில் எழுதி வைத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் பாஸ்​கர் ராவ் உடல்​நலக்​குறை​வால் சமீபத்​தில் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது வீட்​டுப் பத்​திரம், வங்​கிக் கணக்கு புத்​தகம் மற்​றும் உயி​லின் நகலை அவரது உறவினர்​கள் நேற்று திரு​மலைக்கு வந்​து, தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதிகாரி வெங்​கைய்ய சவுத்​ரி​யிடம் ஒப்​படைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *