
திருமலை: ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் வசித்த ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ், ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவர். அவர் தனது இறப்புக்கு பிறகு தனது வீடு மற்றும் வங்கி சேமிப்பை ஏழுமலையானுக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் உயிலின் நகலை அவரது உறவினர்கள் நேற்று திருமலைக்கு வந்து, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரியிடம் ஒப்படைத்தனர்.