• July 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நேற்​றும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்​தூர், அகம​தா​பாத் விமான விபத்​து, பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி உள்​ளிட்ட விவ​காரங்​களை மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க் கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அவர்​கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​ட​தால் அன்​றைய தினம் இரு அவை​களும் முடங்​கின. கடந்த 22, 23 ஆகிய தேதி​களி​லும் இதே விவ​காரங்​களால் நாடாளு​மன்​றம் முடங்​கியது.

இதைத் தொடர்ந்து 4-வது நாளாக நாடாளு​மன்​றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்​களவை தொடங்​கியதும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்​டனர். அப்​போது மக்​கள​வைத் தலை​வர் ஓம் பில்லா கூறும்​போது, “சில எம்​பிக்​கள் அவை​யின் மாண்பை சீர்​குலைத்து வரு​கின்​றனர்” என்று கடுமை​யாக கண்​டித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *