
சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப்போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார். திமுக கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினராக இன்று அவர் பதவியேற்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க மட்டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்புவதற்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன்.