• July 25, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் உயிரிழந்​தனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், 12 பேரை​யும் விடு​தலை செய்து திங்​கள் கிழமை உத்​தர​விட்​டது. இதையடுத்து அனை​வரும் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *