
புதுக்கோட்டை: தமிழகத்தில் வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: விவசாயிகள் நலனுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.14,400 கோடியில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை கொண்டுவந்தோம்.