• July 25, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்​து​வக் குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் பி.நம்​பெரு​மாள்​சாமி (85) நேற்று கால​மா​னார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம் செய்​யப்​படு​கிறது. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

உடல் நலக்​குறை​வால் சென்னை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​று​வந்த நம்​பெரு​மாள்​சாமி நேற்று அதி​காலை கால​மா​னார். அவரது உடல் மதுரைக்​குக் கொண்டு வரப்​பட்​டு, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்​டில் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது. தேனி மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அம்​பாச​முத்​திரத்​தில் இன்று (ஜூலை 25) நம்​பெரு​மாள்​சாமி​யின் உடல் தகனம் செய்​யப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *