
மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்துவக் குழுமத்தின் முன்னாள் தலைவர் பி.நம்பெருமாள்சாமி (85) நேற்று காலமானார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நம்பெருமாள்சாமி நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டு, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அம்பாசமுத்திரத்தில் இன்று (ஜூலை 25) நம்பெருமாள்சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.