
தூத்துக்குடி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத் திறப்பு விழா மற்றும் தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்துவைக்கிறார். மேலும், பல்வேறு திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.