• July 25, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் தாக்​கப்​பட்​ட​தில் உயிர்​இழந்​தனர். உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்படி இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

இதில் சாத்​தான்​குளம் காவல்​நிலைய ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்​கள் முத்​து​ராஜா, செல்​லதுரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயில் ​முத்து உட்பட 9 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் 4 ஆண்​டு​களுக்கு மேலாக நடந்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *