
சென்னை: எவ்வளவு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிலில் குறிப்பிடக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான வால்பாறை ஏ.தரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில். ‘‘மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட நிலையில் டாஸ்மாக் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாகக்கூறிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.