
மதுரை: பழமையான தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 60 ஆயிரம் கையெழுத்து பிரதிகளும், 4,503 அரிய புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தில் 46 பணியிடங்கள் உள்ளன. தற்போது 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்து. எஞ்சிய இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.