
மதுரை: போலீஸ் தாக்கியதில் மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயாரிடம் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருமங்கலம் கல்லூரி பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமியம்மாள் ஆகியோர் கடந்த ஜூன் 27-ம் தேதியன்று சிவகங்கை மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்றனர். அப்போது காரில் இருந்த நிகிதாவின் நகை காணாமல் போன புகார் தொடர்பாக கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.