• July 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் உள்ளது கடி குர்த் கிராமம். இதில் சரியான சாலை இன்றி அந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த குர்த் கிராமவாசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு வருடமாக முறையிட்டும் பலனில்லாமல் இருந்தது. இதனையடுத்து அந்த கிராமத்தில் வசிக்கும் கர்பிணிப் பெண்ணான லீலா சாஹு என்பவர் அந்த சாலையை தன் கைப்பேசியில் வீடியோ பதிவு செய்தார்.

மேலும் அந்த வீடியோவில் தானே தோன்றி, அங்கு சாலை வசதி இல்லாததால் ஏற்பட்டு வரும் பாதிப்பை விளக்கினார். தன்னுடன் சேர்த்து ஏழு கிராமப் பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு அவசரம் எனில் ஆம்புலன்ஸ் வராமல் எந்த ஆபத்தும் நிகழலாம் என எச்சரித்திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *