• July 24, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்று இரவு, ஸ்டாலின் இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்… அவருக்கு சில பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.

தற்போது அப்போலோ மருத்துவமனை ஸ்டாலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்டாலின்

அதில் குறிப்பிட்டுள்ளதாவது…

“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்னை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்”.

அப்போலோ அறிக்கை
அப்போலோ அறிக்கை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *