• July 24, 2025
  • NewsEditor
  • 0

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவோ, ஏற்கவோ அங்கிருப்பவர்களுக்கு இஷ்டமில்லை. அதனால் அங்கே பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று குறை சொல்லி காங்கிரஸைவிட்டு விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி, 2024 பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார். ஆனால், கட்சியில் சேர்ந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகும் நிலையிலும் பாஜக அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. இதையடுத்து, அவர் தவெக-வில் இணையப் போவதாக இப்போது சிலர் செய்திகளை சுத்தவிட்டிருக்கிறார்கள்.

கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விளவங்​கோடு சட்​டப்​பேரவை தொகு​தி​யில் 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்​தல்​களில் காங்​கிரஸ் வேட்​பாள​ராக போட்​டி​யிட்டு வென்​றவர் விஜயதரணி. அதனால், தொடர்ச்​சி​யாக மூன்று முறை வெற்​றி​பெற்ற தனக்கு மாநில காங்​கிரஸ் தலை​வர் பதவி கிடைக்​கும் என எதிர்​பார்த்​தார் விஜயதரணி. ஆனால், அது கைகூ​டா​மல் போனது.

காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டமன்​றக் குழு தலை​வர் செல்​வப்​பெருந்​தகைக்கு காங்​கிரஸ் தலை​வர் பதவி கொடுக்​கப்​பட்​ட​தால், அவர் வகித்த சட்​டமன்​றக் குழு தலை​வர் பதவி​யா​வது கிடைக்​கும் என எதிர்​பார்த்​தார் விஜயதரணி. அதை​யும் சிலர் லாபி செய்து அவரை விட ஜூனிய​ரான கிள்​ளியூர் எம்​எல்​ஏ-​வான ராஜேஷ் குமாருக்கு கொடுக்க வைத்​தனர். இதனால் கட்​சித் தலைமை மீது அதிருப்தி கொண்ட விஜயதரணி, அடுத்த ஒரே வாரத்​தில் டெல்​லி​யில் நட்​டாவை சந்​தித்து தன்னை பாஜக-​வில் இணைத்​துக் கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *