
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாவேரியை சேர்ந்த காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பசவா நகரைச் சேர்ந்தவர் ஷங்கர்கௌடா ஹடிமணி (51). காய்கறிக் கடையை நடத்திவரும் இவருக்கு, அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ டிஜிட்டல் முறையில் ரூ.1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு நீங்கள் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.