
புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணி குறித்து அன்றாடம் புதுப்புது ஊகங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில், வெளியுறவு அமைச்சகம் அவருக்கு மிகக் குறைவான வெளிநாட்டுப் பயணங்களை ஒதுக்கியதாலும், அரசு ‘ப்ரோட்டோகால்’ ரீதியாக மரியாதைக் குறைபாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகவும் அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என்ற புதிய ஊகம் தற்போது வெளியாகியுள்ளது.
தனக்கு முன்பு குடியரசு துணைத் தலைவர் பதவிகளில் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் தான் ஓரங்கட்டப்படுவதாக, உரிய மரியாதை வழங்கப்படாததாக தன்கர் உணர்ந்தார் என்று இந்த புதிய ‘தியரி’ கூறுகிறது.