• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித் தடத்​தில் ஒரு பகு​தி​யாக, பனகல் பூங்கா – கோடம்​பாக்​கம் வரை மெட்ரோ ரயில் சுரங்​கப்​பாதை பணி நிறைவடைந்​தது. இப்​பணி​யில் ஈடுபட்ட சுரங்​கம் தோண்​டும் இயந்​திர​மான “பீ​காக்” கோடம்​பாக்​கம் நிலை​யத்தை வெற்​றிகர​மாக வந்​தடைந்​தது.

சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில், கலங்​கரை விளக்​கம்- பூந்​தமல்லி பைபாஸ் வரையி​லான 4-வது வழித் தடம் (26.1 கி.மீ.) முக்​கிய வழித்​தட​மாக உள்​ளது. இத்தடத்தில், கலங்​கரை விளக்​கம் – கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரை சுரங்​கப் பாதை​யாக​வும், கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் முதல் பூந்​தமல்லி பைபாஸ் வரை உயர்​மட்​டப் பாதை​யாக​வும் அமை​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *