
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெறவும் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சட்டம் இயற்றவும் அவர்கள் வலியுறுத்தினர்.
விவசாய அமைப்புகளின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 2019 முதல் 2023 வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு பெறுவதில் கடுமையான சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நேற்று வலியுறுத்தினர்.