• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் விரி​வாக்​கத்​துக்​காக நடை​பெற்று வரும் 2-ம் கட்ட கட்​டு​மான பணி​களை, டெல்​லியை சேர்ந்த அதி​காரி​கள் குழு நேற்று ஆய்வு செய்​தது. சென்னை விமான நிலை​யத்​தில் நாளுக்கு நாள் பயணி​களின் எண்​ணிக்​கை​யும், விமானங்​களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்​துக் கொண்டே வரு​கின்​றன. அந்த வகை​யில், கடந்த 2015-ம் ஆண்டு 2.2 கோடி​யாக இருந்த பயணி​களின் எண்​ணிக்​கை, 2025-ல் 3.5 கோடியை நெருங்​கி​யிருக்​கிறது.

இதையொட்​டி, சென்னை விமான நிலை​யத்தை ரூ.2,467 கோடி மதிப்​பீட்​டில் 2.36 லட்​சம் சதுர மீட்​டரில் விரிவுபடுத்த திட்​ட​மிட்​டு, அதற்​கான பணி​களை 2 கட்​டங்​களாக நடத்த இந்​திய விமான நிலைய ஆணை​யம் முடிவு செய்​தது. அதன்​படி, முதல் கட்ட பணி​கள் ரூ.1,260 கோடி​யில் 1.49 லட்​சம் சதுர மீட்​டரிலும், 2-ம் கட்ட பணி​கள் ரூ.1,207 கோடி​யில் 86,135 சதுரமீட்​டரிலும் நடத்த திட்​ட​மிடப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *