
சென்னை: சென்னையில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்படுவதை கண்டித்து, மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் 68 இடங்களில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள், அம்பத்தூர் மண்டலத்தில் சில வார்டுகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியை தனியாரிடம் மாநகராட்சி வழங்கியுள்ளது.